ETV Bharat / city

2 மாதங்களுக்குப் பிறகு உதகை ரயில் சேவை தொடக்கம்

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் உதகை மலை ரயில் சேவை இன்று தொடங்கியது. நிலச்சரிவு காரணமாக கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

author img

By

Published : Dec 22, 2021, 12:21 PM IST

உதகை ரயில் சேவை துவக்கம்  2 மாதங்களுக்கு பிறகு ரயில் பாதை சீரமைக்கப்பட்டது  உதகையில் பயணிகள் உற்சாகம்  ooty train started  Ooty UNESCO certified train service  Tourist happy at Ooty
ooty railway

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் சேவை இயங்கிவருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை முழுவதும் பற்சக்கரங்களால் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது.

அண்டை மாநில சுற்றுலாப் பயணிகள்

மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளைத் தாண்டி இதமான சூழலில் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.

இந்நிலையில் கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரயில் பாதையில் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.

மேலும்,தொடர் மழையின் காரணமாக மலை ரயில் சேவை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதிமுதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர்.

பயணிகள் உற்சாகம்

இந்நிலையில் மலை ரயில் தண்டவாளத்தில் சேதமடைந்த பகுதியைச் சீரமைக்கும் பணிகள் முடிவுபெற்றதால் இம்மலை ரயில் சேவையானது இன்றுமுதல் இயங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்தது.

இதனையடுத்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இன்று காலை 7 மணியளவில் நான்கு பெட்டிகளுடன் உதகைக்குப் புறப்பட்டுச் சென்றது. பயணிகள் உற்சாகமாக ரயில் முன்பு செல்ஃபி எடுத்தும், ஆரவாரத்துடனும் கிளம்பிச்சென்றனர்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு - காதல் ஜோடி தற்கொலை

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் சேவை இயங்கிவருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை முழுவதும் பற்சக்கரங்களால் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது.

அண்டை மாநில சுற்றுலாப் பயணிகள்

மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளைத் தாண்டி இதமான சூழலில் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.

இந்நிலையில் கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரயில் பாதையில் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.

மேலும்,தொடர் மழையின் காரணமாக மலை ரயில் சேவை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதிமுதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர்.

பயணிகள் உற்சாகம்

இந்நிலையில் மலை ரயில் தண்டவாளத்தில் சேதமடைந்த பகுதியைச் சீரமைக்கும் பணிகள் முடிவுபெற்றதால் இம்மலை ரயில் சேவையானது இன்றுமுதல் இயங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்தது.

இதனையடுத்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இன்று காலை 7 மணியளவில் நான்கு பெட்டிகளுடன் உதகைக்குப் புறப்பட்டுச் சென்றது. பயணிகள் உற்சாகமாக ரயில் முன்பு செல்ஃபி எடுத்தும், ஆரவாரத்துடனும் கிளம்பிச்சென்றனர்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு - காதல் ஜோடி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.